ஞாயிறு, ஜனவரி 03, 2016

குறள் எண்: 0154 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0154}

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
போற்றி யொழுகப் படும்

விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும், நீங்காத நிறைவைக் கொண்டிருக்க விரும்பினால்; பொறுத்தருள்வதை, உயர்வாய் பேணி ஒழுகவேண்டும்.
(அது போல்...)
எக்காலமும், இறவாதப் பிறப்பை அடைந்திட விரும்பினால்; மனிதத்தை, சுவாசமாகப் பழகி வாழவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக