சனி, ஜனவரி 23, 2016

குறள் எண்: 0174 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0174}

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 
புன்மையில் காட்சி யவர்

விழியப்பன் விளக்கம்: புலன்களை வென்று, குற்றங்களைக் களைந்த தேடலுடையவர்; தன்னிடம் இல்லையென்று, மற்றவரின் பொருள்மேல் மோகம் கொள்ளமாட்டார்.
(அது போல்...)
ஆசைகளை அடக்கி, ஊழல்களை ஒழித்த கடமையவர்; தன்னுரிமை உயர்ந்ததென்று, மற்றவரின் உரிமைமேல் ஆதிக்கம் செலுத்தமாட்டார்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக