சனி, ஜனவரி 16, 2016

குறள் எண்: 0167 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0167}

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும்

விழியப்பன் விளக்கம்: பிறர்மேல் பொறாமை கொள்வோரை வெறுத்து; தன் தமக்கை மூதேவியை சேர்த்துவிட்டு, திருமகள் விலகிவிடுவாள்.
(அது போல்...)
பிறர் நம்பிக்கையை விமர்சிப்போரை புறக்கணித்து; மனிதகுலத்தின் ஆதியான மிருக-தன்மையை விட்டுவிட்டு, மனிதம் விலகிவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக