வியாழன், ஜனவரி 21, 2016

குறள் எண்: 0172 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0172}

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவன்மை நாணு பவர்

விழியப்பன் விளக்கம்: நடுநிலையற்ற செயல்களை, அவமானமாய் கருதுபவர்; பயன் தருவதே ஆயினும், மற்றவர் பொருளை அபகரிக்கும் பாவச்செயல்களைச் செய்யார்.
(அது போல்...)
மனிதமற்ற மனிதர்களை, தீமையாய் எண்ணுவோர்; உயர்பதவி அளிப்பதே ஆயினும், சாமானியர்களின் வாழ்வியலைக் கெடுக்கும் தீவிரவாதங்களைத் தவிர்ப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக