புதன், ஜனவரி 20, 2016

குறள் எண்: 0171 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0171}

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும்

விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையின்றி, பிறர் அறவழியில் சேர்த்ததை அபகரித்தால்; நம் குடும்பம் அழிவதோடு, குடும்பத்தில் குற்றச்செயல்களையும் விளைவிக்கும்.
(அது போல்...)
அரசியல்-நெறியின்றி, மக்களின் கலாச்சாரத்தில் கலந்ததை சீர்குலைத்தால்; அக்கட்சி  அழிவதோடு, அக்கட்சியில் தீவினைகளையும் அதிகரிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக