வியாழன், ஜனவரி 28, 2016

குறள் எண்: 0179 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0179}

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
திறன்அறிந் தாங்கே திரு

விழியப்பன் விளக்கம்: அறத்தை உணர்ந்து, பிறர் பொருளை அபகரிக்காத பகுத்தறிந்தவரிடம்;  அவரின் தகுதியை கண்டறிந்து, திருமகள் எனும் செல்வம் சேரும்.
(அது போல்...)
வாழ்வியலைப் புரிந்து, பிறரின் மதத்தை அவமதிக்காத  சான்றோரிடம்; அவரின் நற்குணத்தை பாராட்டி, மனிதம் எனும் மேன்மை சேரும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக