செவ்வாய், ஜனவரி 26, 2016

குறள் எண்: 0177 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0177}

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
மாண்டற் கரிதாம் பயன்

விழியப்பன் விளக்கம்: பிறர்க்குரிய செல்வத்தை அபகரிப்பதால், விளையும் வினைப்பயன்; நன்மையானதாய்  இருப்பது அரிது என்பதால், அதை மறுத்திடவேண்டும்.
(அது போல்...)
விலங்குகளுக்குரிய காட்டை அழிப்பதால், உருவாகும் எதிர்விளைவு; பாதுகாப்பானதாய் இருப்பது கடினம் என்பதால், அதை கைவிடவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக