வெள்ளி, ஜனவரி 08, 2016

குறள் எண்: 0159 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0159}

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் 
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

விழியப்பன் விளக்கம்: பிறரின், எல்லையற்ற தீச்சொற்களையும் பொறுத்தருள்பவர்; எல்லாப் பற்றுகளையும் துறந்தவரைப் போன்று, புனிதமானவர் ஆவர்.
(அது போல்...)
உறவுகளின், எண்ணற்ற வரம்பு-மீறல்களையும் மன்னிப்போர், ஐந்து புலன்களையும் அடக்கியோரைப் போன்ற,  மனத்திடம் கொண்டவராவார்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக