செவ்வாய், ஜனவரி 19, 2016

குறள் எண்: 0170 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0170}

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

விழியப்பன் விளக்கம்: பொறாமை கொண்டோர், வளம் பெருகி உயர்ந்ததும் இல்லை; பொறாமை இல்லாதோர், வளம் குன்றி தாழ்ந்ததும் இல்லை.
(அது போல்...)
சோம்பல் இருப்போர், வலிமை மிகுந்து சாதித்ததும் இல்லை; சோம்பல் இல்லாதோர், வலிமை இழந்து தோற்றதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக