வெள்ளி, ஜனவரி 29, 2016

குறள் எண்: 0180 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0180}

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
வேண்டாமை என்னுஞ் செருக்கு

விழியப்பன் விளக்கம்: விளைவுகளை எண்ணாமல், பிறர் பொருளை அபகரிக்க நினைப்பது அழிவைத் தரும்; அதை வேண்டாத திண்ணமான எண்ணம், வெற்றியைத் தரும்.
(அது போல்...)
விளைவுகளை உணராமல், விவசாய நிலங்களை அழிக்க முனைவது பஞ்சத்தை உருவாக்கும்; அதை தடுக்கும் உறுதியான செயல், வாழ்வியலை உயர்த்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக