புதன், ஜனவரி 27, 2016

குறள் எண்: 0178 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0178}

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள்

விழியப்பன் விளக்கம்: பிறருடைய செல்வத்தை, அபகரிக்க முயலாத நல்லெண்ணமே; நம்முடைய செல்வம், குறையாமல் இருப்பதற்கான காரணி ஆகும்.
(அது போல்...)
பிறரின் தேடலை, வணிகமாக்க எண்ணாத நல்லொழுக்கமே; நம்முடைய தேடல், தடம்புரளாமல் பயணிப்பதற்கு தேவையானது ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக