செவ்வாய், ஜனவரி 05, 2016

குறள் எண்: 0156 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0156}

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் 
பொன்றுந் துணையும் புகழ்

விழியப்பன் விளக்கம்: பிறர் தவறைத் தண்டிப்பார்க்கு, ஒருநாளே மகிழ்ச்சி; அத்தவறைப் பொறுத்தருள்வோர்க்கு, உலகம் அழியும் வரை சிறப்பிருக்கும்.
(அது போல்...)
பிறர் அறியாமையைப் பழிப்போர்க்கு, ஒருகணமே மனநிறைவு; அவ்வறியாமையை நீக்குவோர்க்கு, வாழ்நாள் இறுதி வரை முழுமையிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக