ஞாயிறு, ஜனவரி 17, 2016

குறள் எண்: 0168 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0168}

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும்

விழியப்பன் விளக்கம்: பொறாமை எனப்படும் இணையற்ற தீயொழுக்கம்; எல்லாச் செல்வங்களையும் அழித்து, ஒருவரை நரகத்தில் சேர்க்கும்.
(அது போல்...)
நேர-விரயம் எனப்படும் முறையற்ற தீப்பழக்கம்; எல்லாத் திறமைகளையும் மறைத்து, ஒருவரை வாழ்வியலில் தாழ்த்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக