வெள்ளி, ஜனவரி 22, 2016

குறள் எண்: 0173 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0173}

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: பேரின்பத்தின் மகிமையை உணர்ந்து, அதனை வேண்டுவோர்; சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாதவற்றை செய்யமாட்டார்கள்.
(அது போல்...)
விவசாயத்தின் மதிப்பை அறிந்து, அதனை நேசிப்போர்; பணத்தை விரும்பி, விவசாய நிலங்களை விற்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக