சனி, ஜனவரி 09, 2016

குறள் எண்: 0160 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0160}

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

விழியப்பன் விளக்கம்: உணவைத் தவிர்த்து நோன்பிருப்போர்; பிறர் பேசும் தீய சொற்களைப் பொறுத்தருள்வோர்க்கு, அடுத்த நிலையே அடைவர்.
(அது போல்...)
அறமற்றதை மறுத்து வாழ்வோர்; பிறர் செய்யும் மனிதமற்ற செயல்களை மன்னிப்போர்க்கு, அடுத்த போற்றுதலையே பெறுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக