வியாழன், ஜனவரி 07, 2016

குறள் எண்: 0158 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0158}

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல்

விழியப்பன் விளக்கம்: அதீதத்தால், தீயவை செய்தோரின் மனதை; நம் பொறுத்தருளும் தகுதியால், வெல்லவேண்டும்.
(அது போல்...)
சர்வாதிகாரத்தால், அவமரியாதை செய்தோரின் சுயத்தை; நம் மனிதநேய குணத்தால், மாற்றவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக