புதன், ஜனவரி 06, 2016

குறள் எண்: 0157 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0157}

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று

விழியப்பன் விளக்கம்: பிறர், நமக்கு செய்யத் தகாதவற்றைச் செய்தாலும்; அதனால் மனம் வருந்தி, அறனல்லாதவற்றை செய்யாமல் பொறுத்தருளுதல் நலம்.
(அது போல்...)
மற்றவர், நம் உரிமைகளை மறுத்துச் செயல்பட்டாலும்; அதனால் தன்னிலை-இழந்து,  பகையை வளர்க்காமல் இருப்பது சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக