செவ்வாய், ஜனவரி 12, 2016

குறள் எண்: 0163 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0163}

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் 
பேணாது அழுக்கறுப் பான்

விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையால் விளையும் பேறுகளை வேண்டாமென்பவர்; பிறரின் பேறுகளைக் கண்டு மகிழாது, பொறாமை கொள்வர்.
(அது போல்...)
மனிதத்தால் உருவாகும் நன்மைகளை உணராதவர்; பிறரின் நன்மைகளை வியந்து பாராட்டாமல், புரளி பேசுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக