ஞாயிறு, ஜனவரி 24, 2016

குறள் எண்: 0175 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0175}

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
வெஃகி வெறிய செயின்

விழியப்பன் விளக்கம்: நன்கு தெளிந்த, விரிந்த பகுத்தறிவு இருந்தும்; ஒருவர் அறிவற்ற வகையில் நடந்து, மற்றவரின் பொருளை அபகரிப்பாராயின்  - அதனால்  என்ன பயன்?
(அது போல்...)
உலகமே அங்கீகரித்த, சிறந்த திறமை இருப்பினும்; ஒருவர் மனிதமற்ற வகையில் பேசி, பிறரின் சுயத்தை சிதைப்பாராயின் - அதனால்  என்ன தனித்துவம்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக