திங்கள், ஜனவரி 25, 2016

குறள் எண்: 0176 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  018 - வெஃகாமைகுறள் எண்: 0176}

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் 
பொல்லாத சூழக் கெடும்

விழியப்பன் விளக்கம்: அருளை விரும்பி, அறநெறியில் பயணிப்பவரே ஆயினும்; பிறரின் உடைமைகளை அபகரிக்க எண்ணினால், கெட்டழிவர்.
(அது போல்...)
மேன்மையை அடைய, வாய்மையைக் கடைபிடிப்பவரே ஆயினும்; பிறரின் பொய்களை ஆதரிக்க முனைந்தால், தடம்புரள்வர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக