ஞாயிறு, செப்டம்பர் 30, 2018

குறள் எண்: 1155 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1155}

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

விழியப்பன் விளக்கம்: காப்பதாயின், வாழ்க்கைத் துணையாக அமைந்தவரின் பிரிவு நிகழாமல் காக்கவேண்டும்! மாறாய், அவர் பிரிந்து விலகினால்; சேர்வது அரிதாகும்!
(அது போல்...)
தடுப்பதாயின், கொடுங்கோல் ஆட்சியை அளிப்போரின் காலம் நீளாமல் தடுக்கவேண்டும்! மாறாய், அவர் வென்று திரும்பினால், மீள்வது அரிதாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக