சனி, ஏப்ரல் 02, 2016

குறள் எண்: 0244 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0244}

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

விழியப்பன் விளக்கம்: மண்ணுலகிலுள்ள உயிர்களைப் பேணி, மனிதத்தைப் பகிரும் அன்பர்களுக்கு; தன் உயிருக்கு அஞ்சும்படியான, நிகழ்வுகள் ஏதும் நேராது.
(அது போல்...)
நாட்டிலுள்ள குடிமக்களைக் காத்து, நீதியை நிலைநாட்டும் அரசியலர்களுக்கு; தம் தோல்விக்கு வழிவகுக்கும், கூட்டணிகள் ஏதும் அமையாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக