வியாழன், ஏப்ரல் 28, 2016

குறள் எண்: 0270 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0270}

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

விழியப்பன் விளக்கம்: மனவலிமை இல்லாத மக்கள், பலராக இருக்க காரணம்; தவம் செய்வோர் சிலராகவும், தவம் செய்யாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
(அது போல்...)
நல்லாட்சி செய்யாத தலைவர்கள், பலராக இருக்க காரணம்; பொதுநலம் கருதுவோர் சிலராகவும், பொதுநலம் கருதாதோர் பலராகவும் இருப்பதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக