செவ்வாய், ஏப்ரல் 26, 2016

குறள் எண்: 0268 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0268}

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

விழியப்பன் விளக்கம்: தவம் பழகுவதால், தன்னுயிர் மற்றும் தான் எனும் அகந்தையைத் துறந்தவரை; மன்னுலகிலுள்ள மற்ற உயிர்கள் அனைத்தும் வணங்கும்.
(அது போல்...)
பொதுமை பழகுவதால், சுயகுடும்பம் மற்றும் சுயகட்சி எனும் வளர்ச்சிகளைத் தவிர்த்தவரை; சமூகத்திலுள்ள மற்ற தலைவர்கள் அனைவரும் மதிப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக