ஞாயிறு, ஏப்ரல் 24, 2016

குறள் எண்: 0266 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0266}

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் 
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

விழியப்பன் விளக்கம்: தவம் சார்ந்த செயல்கள் செய்வோரே, பிறவிக்கடனை செய்வோர் ஆவர்; மற்றவரெல்லாம் ஆசைக்கு அடிமையாகி, வீண்செயல்கள் செய்வராவர்.
(அது போல்...)
வாய்மை சார்ந்த வாக்குறுதிகள் அளிப்பவையே, மக்களாட்சியை உணர்ந்த கட்சிகளாகும்; மற்றவையெல்லாம் பதவிக்கு அடிமையாகி, ஊழல்கள் செய்பவையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக