திங்கள், ஏப்ரல் 04, 2016

குறள் எண்: 0246 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0246}

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

விழியப்பன் விளக்கம்: வாழ்வியலின் அறப்பொருளை விலக்கி, பிறவிப்பயனை மறந்து வாழ்வோர்; அருள் எனும் நல்லறத்தை இழந்து, தீயவை செய்து வாழ்வர்.
(அது போல்...)
ஆறாவது அறிவை உபயோகிக்காமல், மனிதத்தை உணராமல் இருப்போர்; பகிர்தல் எனும் நற்குணத்தை மறந்து, பிறரை ஏய்த்து பிழைப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக