வெள்ளி, ஏப்ரல் 01, 2016

குறள் எண்: 0243 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0243}

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

விழியப்பன் விளக்கம்: அன்புக்கு அடிபணிந்த, அருள் நிறைந்த உள்ளம் கொண்டோர்க்கு; துன்பமான சூழல்கள் நிறைந்த இருண்ட உலகத்தில் (நரகம்), நுழைதல் சாத்தியமில்லை.
(அது போல்...)
அறத்திற்கு பயந்து, நேர்மையுடன் செய்திகளை அறிவிக்கும் ஊடகத்துக்கு; அறமற்ற ஊடகங்கள் சூழ்ந்த வியாபாரப் போட்டியில், பங்கேற்றல் இயலாதது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக