திங்கள், ஏப்ரல் 25, 2016

குறள் எண்: 0267 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0267}

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

விழியப்பன் விளக்கம்: நெருப்பில் சுடுவதால், சுடுவதற்கு ஏற்ப ஒளிரும் பொன் போல்; தவம் மேற்கொள்வோரின் பகுத்தறிவு, துன்பங்களின் அளவுக்கேற்ப விரிவடையும்.
(அது போல்...)
அறச்செயலில் ஈடுபடுவதால், ஈடுபாட்டிற்கு ஏற்ப வளரும் மனிதம் போல்; வாழ்வியலை ஆய்வோரின் தெளிவு, சிந்தனைத் திறனுக்கேற்ப வலுவடையும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக