புதன், ஏப்ரல் 20, 2016

குறள் எண்: 0262 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0262}

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது

விழியப்பன் விளக்கம்: நல்லறம் பழகும் மனத்திடம் உள்ளவர்க்கே, தவம் செய்வது சாத்தியமாகும்; நல்லறம் இல்லாதோர், தவம் பழகுவது  வீண்செயலாகும்.
(அது போல்...)
சுயம் காக்கும் ஒழுங்கியல் தெரிந்தவர்க்கே, சமூக சேவை கைகூடும்; சுயம் உணராதோர், சமூகசேவை ஆற்றுவது பயனற்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக