புதன், ஏப்ரல் 13, 2016

குறள் எண்: 0255 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0255}

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

விழியப்பன் விளக்கம்: மாமிசத்தை உண்ணாத அறத்தில் உள்ளது, உயிரினங்களின் நிலைத்தன்மை; புலால் உண்டால், நரகம் வாசல்திறந்து வெளியனுப்பாது.
(அது போல்...)
நலிந்தோரை ஒடுக்காத நேர்மையில் உள்ளது, பொதுவுடைமயின் நிலைத்தன்மை; நலிந்தோரை ஒடுக்கினால், சமுதாயம் மனமுவந்து ஆதரிக்காது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக