சனி, ஏப்ரல் 09, 2016

குறள் எண்: 0251 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0251}

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

விழியப்பன் விளக்கம்: தன்னுடைய தேகத்தை வலிமையாக வைத்துக்கொள்ள, பிறவுயிரின் தேகத்தை உண்பவர்; எப்படி அருளைப் பழகமுடியும்?
(அது போல்...)
தம்மக்களின் சொத்தை அளவுகடந்து பெருக்கிட, பொதுமக்களின் சொத்தை அபகரிப்பவர்; எப்படி மக்களாட்சியை உணரமுடியும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக