வெள்ளி, ஏப்ரல் 22, 2016

குறள் எண்: 0264 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0264}

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் 
எண்ணின் தவத்தான் வரும்

விழியப்பன் விளக்கம்: பகைவரை வீழ்த்தவும் மற்றும் சுற்றத்தாரை உயர்த்தவும் எண்ணினால்; அவை தவம் செய்யும் இயல்பினால் நிறைவேறும்.
(அது போல்...)
தீவினைகளை அழிக்கவும் மற்றும் நல்வினைகளைப் பெருக்கவும் முனைந்தால்; அவை தேடல் விதைக்கும் சிந்தனையால் சாத்தியமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக