வெள்ளி, ஏப்ரல் 08, 2016

குறள் எண்: 0250 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0250}

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து

விழியப்பன் விளக்கம்: அருள் உணர்வில்லாமல், நம்மைவிட பலவீனமானவரை துன்புறுத்தும் போது; நம்மைவிட வலிமையானவர் முன், நம்நிலையை எண்ணிடல் வேண்டும்.
(அது போல்...)
மனிதம் உணராமல், கீழ்மட்டத்தில் இருப்போரை தண்டிக்கும்போது; நம்முடைய மேலாளர்கள் முன், நம்நிலையை நினைத்திடல் வேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக