செவ்வாய், ஏப்ரல் 05, 2016

குறள் எண்: 0247 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0247}

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

விழியப்பன் விளக்கம்: பொருள் இல்லாதவர்க்கு, நிலவுலகில் சிறப்பில்லாதது போல்; அருள் இல்லாதவர்க்கு, விண்ணுலகில் சிறப்பில்லாமல் போகும்.
(அது போல்...)
வேலை இல்லாதோர்க்கு, குடும்பத்தில் மதிப்பில்லாதது போல்; பொதுப்பணி செய்யாதோர்க்கு, சமூகத்தில் மதிப்பில்லாமல் போகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக