வியாழன், ஏப்ரல் 14, 2016

குறள் எண்: 0256 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0256}

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

விழியப்பன் விளக்கம்: உண்பதற்காக, உலகத்தார் உயிர்களைக் கொல்லமாட்டார்கள் எனில்; பொருளாதார வளர்ச்சிக்காக, இறைச்சியை விற்பவரும் இருக்கமாட்டார்கள்.
(அது போல்...)
பேராசைக்காக, பொதுமக்கள் விதிகளை மீறமாட்டார்கள் எனில்; கையூட்டைப் பெறுவதற்கு, விதிமீறும் அதிகாரிகளும் இருக்கமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக