வியாழன், ஏப்ரல் 07, 2016

குறள் எண்: 0249 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0249}

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

விழியப்பன் விளக்கம்: அருள் இல்லாதவரின், அறச்செயலை ஆராய்ந்தால்; அது படிக்காதவர் பாடப் புத்தகங்களின், உண்மைப் பொருளை உணர்வது போன்றது என்பது தெளிவாகும்.
(அது போல்...)
பொதுநலம் இல்லாதவரின், அரசியலை ஆராய்ந்தால்; அது பயிற்சியற்றோர் போர் விமானங்களை, போர்க் காலத்தில் ஓட்டுவது போன்றது என்பது புரியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக