ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

குறள் எண்: 0245 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0245}

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் 
மல்லன்மா ஞாலங் கரி

விழியப்பன் விளக்கம்: அருள் உடையவர்க்கு, துன்பமே நேராது என்பதற்கு; காற்றினால் உயிர்த்து, வளம் செழிக்கும் - பரந்த உலகமே சான்றாகும்.
(அது போல்...)
நற்தலைமை இருப்பின், தோல்வியே நேராது என்பதற்கு; முன்னோரால் வளர்ந்து, வாழ்வை வெல்லும் - சிறந்த குடும்பமே உதாரணமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக