வெள்ளி, ஏப்ரல் 15, 2016

குறள் எண்: 0257 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0257}

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்

விழியப்பன் விளக்கம்: இறைச்சி என்பது, வேறோர் உயிரின் புண்ணிலிருந்து உருவான சதை; என்ற உணர்வைப் பெற்றவராயின், இறைச்சியை உண்ணாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
கையூட்டு என்பது, சகமனிதர் ஒருவரின் வியர்வையிலிருந்து விளைந்த பணம்; என்ற உணர்வைக் கொண்டவராயின், கையூட்டைப் பெறாமல் இருக்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக