செவ்வாய், ஏப்ரல் 19, 2016

குறள் எண்: 0261 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  027 - தவம்குறள் எண்: 0261}

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

விழியப்பன் விளக்கம்: தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுப்பது மற்றும் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காதது - போன்ற தன்மைகளே, தவத்தின் காரணிகளாம்.
(அது போல்...)
நாம் செய்த தவறுகளை ஏற்பது மற்றும் பிறரின் தவறுகளைப் பூதாகரமாக சித்தரிக்காதது - போன்ற குணங்களே, மனிதத்தின் கோட்பாடுகளாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக