சனி, ஏப்ரல் 16, 2016

குறள் எண்: 0258 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  026 - புலால் மறுத்தல்குறள் எண்: 0258}

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

விழியப்பன் விளக்கம்: குற்றசெயல்களின் ஆதியை உணர்ந்து, அவற்றைப் பிரிந்த அறிவுடையோர்; தலையைப் பிரிந்த ஓருயிரின், உடலை உண்ணமாட்டார்கள்.
(அது போல்...)
அவநம்பிக்கையின் மூலத்தை ஆராய்ந்து, அதனை முறித்த பண்புடையோர்; உறவிலிருந்து முறிக்கப்பட்ட ஒருவரின், அந்தரங்கத்தை ஆராயமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக