ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

குறள் எண்: 1127 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1127}

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து

விழியப்பன் விளக்கம்: காதலர் அவர், என் கண்ணில் இருக்கிறார்! ஆதலால், கண்ணிற்கு அழகு ஒப்பனை செய்தால்; கண்ணிலிருந்து மறைவார் என்பதறிந்து, அதைச் செய்யேன்!
(அது போல்...)
குரு அவர், என் மனதில் இருக்கிறார்! ஆதலால், மனதைச் சிதைக்கும் செயல்களைச் செய்தால்; மனதிலிருந்து மறைவார் எனவுணர்ந்து, அவற்றைச் செய்யேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக