புதன், செப்டம்பர் 05, 2018

குறள் எண்: 1130 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்; குறள் எண்: 1130}

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்

விழியப்பன் விளக்கம்: என்னவர், என் மனதில் எப்போதும் மகிழ்ந்திருக்கிறார்! ஆனால், உடலால் மட்டும் பிரிந்திருப்பதைப் பார்க்கும் இவ்வூரார்; என்னை "அன்பற்றவர்" என இகழ்வர்!
(அது போல்...)
என்பெற்றோர், என் சுயத்தில் எஞ்ஞான்றும் கலந்திருக்கின்றனர்! ஆனால், குடிசையால் மட்டும்  பிரிந்திருப்பதை அறியும் என்னூரார்; என்னை “சுயநலவாதி” என சாடுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக