ஞாயிறு, செப்டம்பர் 23, 2018

குறள் எண்: 1148 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1148}

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்

விழியப்பன் விளக்கம்: காமம் சேர் காதலை, பொய்யாய் புனைந்து பேசி அழிப்போம் என இவ்வூரார் சொல்வது; எரியும் நெருப்பை, நெய்யை ஊற்றி அழிப்போம் என்பது போலிருக்கிறது!
(அது போல்...)
மக்கள் சார் ஆட்சியை, ஒற்றை வரியை விதித்துக் காப்போம் என இவ்வரசுகள் சொல்வது; அதீத தாகத்தை, நஞ்சைக் கொண்டு தணிப்போம் என்பது போலிருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக