ஞாயிறு, செப்டம்பர் 16, 2018

குறள் எண்: 1141 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1141}

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

விழியப்பன் விளக்கம்: எம் காதலைப் பொய்யாய் புனைந்து பேசுவதால், காதலின் ஆருயிர் நீடித்து நிலைப்பதை; அப்படிப் பேசுவோர் அறியாதது, நான் செய்த நற்பேற்றால் தான்!
(அது போல்...)
எம் தலைவரை எதிரியாய் நினைத்து விமர்சிப்பதால், இயக்கத்தின் மய்யம் மேலும் திடமாவதை; அப்படி விமர்சிப்போர் உணராதது, அரசியல் மாற்றம் நிகழ்வதற்கு தான்!

2 கருத்துகள்: