வெள்ளி, செப்டம்பர் 14, 2018

குறள் எண்: 1139 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1139}

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு

விழியப்பன் விளக்கம்: பொதுவெளியில் பேசப்படாததால், தன்னை எவரும் அறிவதில்லை என எண்ணிதான்; எல்லோரும் அறியும்படி, காமம் - தெருவில் மயக்கத்துடன் சுற்றுகிறதோ?
(அது போல்...)
மக்களிடம் ஆதரவில்லாததால், தன்னை எவரும் மதிப்பதில்லை என எண்ணிதான்; எல்லோரும் வருந்தும்படி, ஊழல் - உலகில் அதிகாரத்துடன் வாழ்கிறதோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக