திங்கள், செப்டம்பர் 17, 2018

குறள் எண்: 1142 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1142}

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்

விழியப்பன் விளக்கம்: அழகிய தாமரை மலரொத்த கண்களை உடைய, என்னவளின் சிறப்பை அறியாமல்; இவ்வூரார் பொய்யாய் புனைந்து பேசி, எமக்குள் காதல் மலர்ந்திட உதவினர்!
(அது போல்...)
உயர்ந்த இமய மலையொத்த பொதுமை அறிந்த, எந்தலைவனின் திறத்தை உணராது; ஊழலர்கள் பொய்யான விமர்சனங்கள் செய்து, பொதுமக்களிடம் அவரை சேர்க்க உதவினர்!

2 கருத்துகள்:

  1. மய்யத்தில் மயங்காதே உன் கருத்துக்களை கொண்டாட

    பதிலளிநீக்கு
  2. ஹா... ஹா... ஹா... என்ன செய்வது? நானும் மய்யத்தை விரும்பும் மாயனே!

    பதிலளிநீக்கு