ஞாயிறு, செப்டம்பர் 09, 2018

குறள் எண்: 1134 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1134}

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

விழியப்பன் விளக்கம்: காமம் எனும் கடுமையான காட்டாறு; நாணம் மற்றும் சிறந்த ஆண்மை எனும் இரண்டு படகுகளையும், அதன் போக்கில் செலுத்தும் வல்லமை உடையது!
(அது போல்...)
கள்ளக்காதல் எனும் தீவிரமான புயல்காற்று; குடும்பம் மற்றும் ஈன்ற பிள்ளைகள் எனும் இரண்டு ஆலமரங்களையும், அதன் திசையில் பிடுங்கியெறியும் தன்மை கொண்டது!

2 கருத்துகள்:

  1. குன்றத்தூர் சம்பவம் பாதிப்போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! ஆனால், அது சமீபத்திய பாதிப்பு.

      ஆனால், கள்ளக்காதல் குறித்து; இதுபோன்றோர் எண்ணமும்/பயமும் எப்போதும் உண்டு! அதுதானே, நம்மை அறவழியில் பயணிக்க வைக்கிறது?! 😊

      நீக்கு