புதன், செப்டம்பர் 26, 2018

குறள் எண்: 1151 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1151}

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

விழியப்பன் விளக்கம்: பிரிந்து செல்லாத நிலையிருப்பின், எனக்கு உரை! மாறாய், உன் "விரைவில் வருவேன்" போன்ற செய்தியை; வரும் வரை வாழும் இயல்பு உடையோருக்கு உரை!
(அது போல்...)
ஊழல் செய்யாத உறுதியிருப்பின், எமக்கு சொல்வீர்! மாறாய் உம் "இலவசம் அளிப்போம்" போன்ற வாக்குறுதியை; அளிக்கும் வரை ஏமாறும் இயல்பு உடையோருக்கு சொல்வீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக