வியாழன், செப்டம்பர் 27, 2018

குறள் எண்: 1152 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1152}

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

விழியப்பன் விளக்கம்: என்னவரின் பார்வையும், இன்பம் அளிக்கும் இயல்புடையது! ஆனால் பிரிவை எண்ணி அஞ்சும் இந்நிலையில், அவரின் புணர்வு கூட துன்பத்தையே அளிக்கிறது!
(அது போல்...)
என்னம்மையின் உருவமும், அன்பை அருளும் தன்மையுடைது! ஆனால் முதுமை நோயில் வாடும் இந்நிலையில், அவரின் இருப்பு கூட வெறுப்பையே அளிக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக