செவ்வாய், செப்டம்பர் 25, 2018

குறள் எண்: 1150 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1150}

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்

விழியப்பன் விளக்கம்: தாம் எதை வேண்டினாலும், அவர்தம் காதலர் அளிப்பர்! அதுபோல், நாம் வேண்டும் பொய்யான புனைவுப் பேச்சை; இவ்வூர் மக்கள் அலராய் பேசுவர்!
(அது போல்...)
பிள்ளைகள் எதை விரும்பினாலும், அவர்தம் பெற்றோர் அளிப்பர்! அதுபோல், நாம் விரும்பும் மாயையான மக்கள் ஆட்சியை; இந்நாட்டு அரசியலார் வாக்குறுதியாய் அளிப்பர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக